சாவு வீட்டில் தகராறு: ஊராட்சி தலைவருடன் மோதிய அதிமுக கவுன்சிலர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையை அடுத்த தாம்பரம் அருகே சாவு வீட்டில் அதிமுக - திமுகவினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலையூரை அடுத்த மதுரப்பாக்கத்தில் ஊராட்சி திமுக தலைவர் அமுதா வேல்முருகனுக்கும் அதிகமு கவுன்சிலர் வெங்கடேசன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் அமுதாவின் கார் உட்பட மூன்று கார், 5 இருசக்கர வாகனங்கள் உடைக்கப்பட்டன.
அதிமுக கவுன்சிலர் வெங்கடேஷன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட கும்பல் இந்த சம்பவத்தை அரங்கேற்றியதாக புகார் எழுந்துள்ளது. பரங்கிமலை துணை ஆணையர் சரவணன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications