பஸ் டே கொண்டாடிய மாணவர்கள், போலீஸார் இடையே மோதல்: எஸ்.ஐ. மீது தாக்குதல்
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அருகே தடையை மீறி பஸ்டே கொண்டாடிய மாணவர்களுக்கும் அதை தட்டிக்கேட்ட போலீஸாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் உதவி ஆய்வாளர்கள் தாக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் மோதலை தடுக்கவும், ரூட் தல போன்ற பிரச்சினைகளை முடிவு கட்ட பஸ்டே கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகத்திற்கும் உத்தரவிடப்படடிருந்தது.

இந்நிலையில், சென்னை மந்தைவெளியில் இருந்து கொரட்டூர் நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்தில் மாநில கல்லூரி மாணசர்கள் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி இந்த பஸ் டே கொண்டாட்டத்தை மாணவர்கள் கொண்டாடியுள்ளனர்.
இதனிடையே அவர்கள் பஸ்சில் மாலை போட்டு, கல்லூரியின் பெயர் போட்ட பேனர் வைத்தும், தாளம் போட்டு, பாட்டு பாடி கொண்டாடி வந்தனர். இதனால் பேருந்தில் பயணிகள் மிகவும் அவதியடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள், மாணவர்களிடம் கேட்டனர்.
இதனால் மாணவர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பயணிகள், போலீஸாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த டி.பி.சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சாமுவேல் (53), பொன் சாமுவேல் (48) ஆகிய இருவரும் டி.பி.சத்திரம் பேருந்து நிறுத்தம் வந்த, அந்த பேருந்தை மறித்தனர்.
அந்த பேருந்தில் இருந்த மாணவர்களை அவர்கள் இருவரும் கண்டித்தனர். இதில் ஆத்திரமடைந்த சில மாணவர்கள்,அவர்கள் இருவரையும் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த சாமுவேலும், பொன் சாமுவேலும் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து டி.பி.சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கல்லூரி மாணவர்கள் சக்திவேல், மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் சில மாணவர்களை தேடி வருகின்றனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications