சேலத்தில் மழை வெள்ளத்தில் இறந்த சிறுவனுக்கு நிதியுதவி அறிவிப்பு
சேலத்தில் மழை வெள்ளத்தில் இறந்த சிறுவனுக்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: சேலத்தில் மழை வெள்ளத்தில் இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ. 4 லட்சம் நிதியுதவி அறிவித்தார்.
சேலத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய இடி மின்னலுடன் பெய்த மழையினால், மாநகரமே வெள்ளக்காடாக மாறியது. அனைத்து பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. 4 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழை காரணமாக, மழைநீர் தாழ்வான பகுதிகளிலிருந்த வீடுகளுக்குள் புகுந்தது.

இந்த மழைக்கு நேற்று புஷ்பா என்ற பெண் பலியானார். இந்நிலையில் ராஜவாய்க்கால் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது இரவு சினிமா பார்த்து விட்டு உறவினர்களுடன் முகமது ஷாத் என்ற சிறுவன் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது ஓடையை கடக்க முயன்றபோது தவறி விழுந்துவிட்டார். உறவினர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தும், பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிறுவன் அடித்து செல்லப்பட்டார்.
இதையடுத்து முகமது ஷாத்தின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மாவட்ட பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications