போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் : அதிகாரிகளுடன் ஓ.பி.எஸ். அவசர ஆலோசனை
சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்துகளை இயக்க மறுத்து பணிமனை முன்பு அமர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் காரணமாக தமிழகத்தில் குறைவான எண்ணிக்கையிலே பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் வெளியூர் செல்லும் மக்கள் இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.