நெடுவாசல் போராட்டத்தை கைவிடுங்கள்... முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள்
நெடுவாசல் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடும் மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என்றும், மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கோரியுள்ளார்.
விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்துள்ளார்.

14வது நாள் போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 14 நாட்களாக நெடுவாசல் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், மாணவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

போராட்டக்குழு சந்திப்பு
இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 11 பேர் கொண்ட நெடுவாசல் போராட்டக் குழு ஒன்று தலைமைச் செயலகம் வந்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தது.

உறுதி
அப்போது, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று பழனிச்சாமி உறுதி அளித்ததாக போராட்டக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.

ஏற்க மறுப்பு
முதல்வர் அளித்த உறுதியை ஏற்க மறுத்த நெடுவாசல் கிராம மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி மறுத்து முறையான அறிக்கை வந்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று மக்கள் அறிவித்தனர்.

முதல்வர் வேண்டுகோள்
இதனையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, போராடும் நெடுவாசல் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் மக்களுக்கு விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்காது என்றும் போராட்டத்தை கைவிடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications