இளைஞர்களுடன் லன்ச் சாப்பிட்ட எடப்பாடி பழனிச்சாமி.. "பன்னீர்" பட்டர் மசாலாவாக இருக்குமோ?!
மதுரையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இளைஞர்களுடன் மதிய உணவை அருந்தினார்.
மதுரை: மதுரையில் நேற்று நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இளைஞர்களுடன் மதிய உணவை அருந்தினார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பல்வேறு நலத்திட்ட விழாவில் கலந்துகொண்டு வருகிறார். மதுரையிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று மதியம் மதுரை சென்றார்.

முதல்வர் வருகையொட்டி மதுரை ரிங் ரோட்டில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழா ஆகியவற்றை இணைத்து 25 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்கும் இளைஞர் பெருவிழா நிகழ்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இளைஞர் பெருவிழா நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதன்பின்னர் இளைஞர்களுடன் மதிய உணவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுவைத்தார்.
இந்த விழாவில் பெரிய அளவில் கூட்டம் சேராதது முதல்வரையும், அதிமுக அம்மா கட்சியினரையும் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications