கூவத்தூரில் இருந்து சென்னை வந்தடைந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் சென்னை வந்தடைந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் இரவு 11 மணிக்கு மேல் அங்கிருந்து சென்னை திரும்பினார்.
தமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி ஏற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தார். தொடர்ந்து 4 குழுக்களாக 30 அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர்.

முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி பின்னர் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் எம்.எல்.ஏக்கள், கட்சி மூத்த நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூவத்தூர் சென்றனர். தொடர்ந்து முதல்வரும் கூவத்தூர் சென்றார்.
அங்கு எம்.எல்.ஏக்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். நாளை சட்டசபை சிறப்பு கூட்டத் தொடர் நடக்க உள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்களுடன் தீவிர ஆலோசனை நடத்திய பின்னர் அங்கிருந்து இரவு 11 மணியளவில் சென்னை புறப்பட்டு வந்தடைந்தார்.
-
அய்யா செல்லூர் ராஜூ நீங்களா? தெர்மாகோல் மேட்டரை மிஞ்சிய தவெக எம்எல்ஏ! குப்பைக்கு குபீர் ஐடியா! -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications