சிறந்த மாநகராட்சிக்கான விருதை நெல்லை மாநகராட்சி தட்டிச் சென்றது

அனைத்து வகைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் மாநகராட்சிக்கான விருது நெல்லை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெல்லை மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

நாட்டின் 71-ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைத்தார்.

CM Edappadi Palanisamy has given award to best municipal corporations

அதன் பின்னர் தியாகிகளுக்கும், வீரதீர செயல்களை புரிந்தோருக்கும், சமூக செயல்பாட்டாளர்களுக்கும் விருதுகளை முதல்வர் எடப்பாடியார் வழங்கினார்.

சிறப்பாக செயல்பட்டு வரும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. நெல்லை மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருது வழங்கப்பட்டது.

சிறந்த நகராட்சிக்கான முதல் பரிசு சத்தியமங்கலத்துக்கும், 2-ஆவது பரிசு பூந்தமல்லிக்கும், 3-ஆவது பரிசு திருமங்கலத்துக்கும் வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த பேரூராட்சிக்கான முதல் பரிசை பொன்னம்பட்டியும், 2-ஆவது பரிசை இருகூர் பேரூராட்சியும், 3-ஆவது பரிசை நம்பியூர் பேரூராட்சியும் தட்டிச் சென்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+