Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்- எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம்- எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு- வீடியோ

    சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்- எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

    சென்னை: சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

    CM Edappadi Palanisamy says that new Airport will be set up in Chennai

    சென்னை நந்தனத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் மீன்பிடி படகு தயாரித்தல், மீன்பிடி படகு பழுதுபார்க்கும் தளம், படகுத்துறை மேம்பாடு, கல்வி மேம்பாட்டு பணிகள், அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்குதல், நலவாழ்வுத் திட்டங்களுக்கான கட்டமைப்புகளை மேம்படுத்துதல், வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், தொழிற்பயிற்சி வழங்குதல், குடியிருப்புகளை மேம்படுத்துதல், விளையாட்டு மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    நகரப் பகுதிகளில் வீடுகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் நகரங்களில் குறிப்பாக, சென்னையில் வாழும் மக்களின் கோரிக்கைகளை ஏற்று, அ.தி.மு.க. அரசு அனைத்துத் தரப்பினருக்கும் இலவசமாக அனுமதிக்கப்படும் தளப் பரப்பளவு குறியீட்டை தற்போதுள்ள 1.5-ல் இருந்து 0.5 உயர்த்தி, 2.0 ஆக மாற்றியமைக்கப்படும்.

    அந்த அறிக்கையை விரைந்து பரிசீலித்து இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். சென்னையின் தொழில் வளர்ச்சி, அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் மக்களின் வாழ்க்கை தரம் உயர்வின் காரணமாக தற்போதுள்ள சென்னை விமான நிலையம் வருகின்ற 2024-ம் ஆண்டில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகியவற்றை கையாள்வதில் முழு நிறைவை அடைந்துவிடும்.

    எனவே புதிய விமான நிலையம் அமைக்க வேண்டியது அவசியமாகிறது என்பதை உணர்ந்த அ.தி.மு.க. அரசு சென்னைக்கு அருகில் உலகத் தரம் வாய்ந்த புதிய பன்னாட்டு விமான நிலையம் ஒன்றை அமைக்கும். சென்னை அடையாறு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு சர்தார் பட்டேல் சாலையில் மத்திய கைலாஷ் பகுதியில் சாலை மேம்பாலம் கட்ட, ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

    கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு எம்ஜிஆர் பஸ் நிலையம் என்ற பெயர் சூட்டப்படும் என்றார். முன்னதாக ரூ.18 கோடி மதிப்பிலான 13 புதிய திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவப்படங்கள் திறக்கப்பட்டன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+