தினகரன் அதிமுகவில் நீடிப்பாரா?.. அதை எடப்பாடி முடிவு செய்வார்... செங்ஸ் நெத்தியடி!
டிடிவி தினகரன் அதிமுகவில் நீடிப்பாரா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் முடிவு எடுப்பார் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
திருத்தணி: திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வரும் டிடிவி தினகரன் அதிமுகவில் நீடிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் கடந்த மாதம் 1-ஆம் தேதி அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட 31 நாள்கள் சிறைவாசத்துக்கு பின்னர் ஒருவழியாக ஜாமீன் கிடைத்து இன்று சென்னை திரும்புகிறார்.
இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் அதிமுக கட்சி பணிகளில் மீண்டும் ஈடுபடுவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
எப்போதும் கட்சிப் பணிதான்
அதற்கு டிடிவி தினகரன் நான் எப்போதும் கட்சிப் பணிகளில் ஈடுபட்டுதான் வருகிறேன். தற்போது ஒரு மாதம் சிறிய இடைவெளி ஏற்பட்டு விட்டது.
நீடிப்பேன்
நான் கட்சியில் துணை பொதுச் செயலாளராக நீடிப்பேன். கட்சியில் இருந்து தன்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கே உள்ளது என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், திருத்தணியில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.
எடப்பாடி முடிவு செய்வார்
அப்போது அவர் அதிமுகவில் டிடிவி தினகரன் நீடிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் முடிவு செ்வார் என்று தெரிவித்தார். இதிலிருந்து கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் ஒன்று திரளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெத்தியடி
சசிகலாவுக்கு ஆதரவாக இருந்தவர் செங்கோட்டையன். தற்போது அவர் தினகரனுக்கு எதிராக பேசியிருப்பது அதிமுக அம்மா வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.