ஆர்.கே.நகர் தொகுதிவாசிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர்: ஜெயலலிதா வழங்கினார்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை அன்று தலைமைச் செயலகத்தில், சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 24,942 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டத்தினையும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ, மாணவியரும் சிரமமின்றி பள்ளிக்கு சென்று வர ஏதுவாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினையும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் இதுவரை விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டத்தின் கீழ் 44,596 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளும், 7106 பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளும் வழங்கப்பட்டுள்ளது.
12.8.2015 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முதல்- அமைச்சருமான ஜெயலலிதா, விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்தின் கீழ், தண்டையார்பேட்டை (வார்டு எண்.38) மற்றும் புதுவண்ணாரப்பேட்டை (வார்டு எண்.39) பகுதிகளைச் சேர்ந்த 24,942 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவதன் அடையாளமாக 10 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கினார்.
மேலும், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பட்டேல் நகரில் அமைந்துள்ள சென்னை மேல்நிலைப் பள்ளிக்கு 142 மிதிவண்டிகள், திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சென்னை மேல்நிலைப் பள்ளிக்கு 232 மிதிவண்டிகள், புத்தா தெருவில் அமைந்துள்ள சென்னை பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு 400 மிதிவண்டிகள், அரசு உதவி பெறும் மேல் நிலைப் பள்ளிகளான தண்டையார் பேட்டையில் அமைந்துள்ள முருகதனுஷ் கோடி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 410 மிதிவண்டிகள், தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சௌந்தரபாண்டி சுப்பம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 334 மிதிவண்டிகள், என மொத்தம் 1518 விலையில்லா மிதிவண்டிகளை 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதன் அடையாளமாக, 5 மாணவ, மாணவியருக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பா. வளர்மதி, எஸ்.பி. வேலுமணி, எஸ். கோகுல இந்திரா, தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications