காவிரி விவகாரத்தில் எடப்பாடி- ஸ்டாலின் ஆலோசனை வரவேற்கத்தக்கது : தா.பாண்டியன்
காவிரி விவகாரத்தில் முதல்வரும், எதிர்கட்சித் தலைவரும் சந்தித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு : காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது வரவேற்கத்தக்கது என்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் உள்ள சி.என்.சி கல்லூரியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்துகொண்டார்.

அதன்பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று செயல்படவேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்துகள் ஏற்புடையதல்ல என்றும், இந்த விவகாரத்தில் தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப்படாதவாறு முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினும் சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பது வரவேற்கத்தக்கது. இதுபோல் அனைத்துக்கட்சிகளும் இணைந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்படவேண்டும் என்றார்.
வெளிநாட்டில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்கு பதிலாக நம் நாட்டில் உள்ள வங்கிகளில் கடன் பெற்று வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வது அவமானமாக உள்ளது. இதைத் தடுக்க மத்தியரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தா.பாண்டியன் தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications