அதிமுகவை யாராலும் வெல்லமுடியாது- துணை முதல்வர் ஓபிஎஸ்
தலைமை செயலகத்தில் ஒ.பன்னீர் செல்வம் தனது அறையில் துணை முதல்வராக பொறுப்பேற்றார். முதல்வர் ஈபிஎஸ், அமைச்சர்கள் வாழ்த்து கூறினர்.
சென்னை: அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது என்று துணைமுதல்வராக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
ஆளுநர் மாளிகையில் துணை முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலகத்தில் தனக்கென ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு வந்து முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

முதல்வர் அறைக்கு அருகிலேயே துணை முதல்வருக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவரது அறைக்கு வந்த ஓ.பன்னீர் செல்வத்தை பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி வரவேற்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
ஓ.பன்னீர் செல்வம் பைல்களில் கையெழுத்து போட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் நிலோபர் கபில், விஜயபாஸ்கர், செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தன்னை 3 முறை முதல்வராக்கியதாக கூறினார்.
அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது என்றும், இரு அணிகளும் இன்று இணைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி என்று கூறினார். அதிமுகவை தாங்கிப் பிடிக்கும் தொண்டர்களும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்று கூறினார் ஓ.பன்னீர் செல்வம்.












Click it and Unblock the Notifications