அந்தோணியார் கோயில் திறப்பு விழா.. தமிழக மீனவர்களை அனுமதிக்க கோரி பிரதமருக்கு பன்னீர்செல்வம் கடிதம்
அந்தோணியார் கோயில் திறப்பு விழாவில் கட்டுப்பாடு ஏதுமின்றி தமிழக மீனவர்கள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழக மீனவர்களை அனுமதிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை அரசு சார்பில் கச்சத்தீவில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய அந்தோணியார் தேவாலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா கடந்த மே 8 -ம் தேதி அன்று நடைபெற்றது. இதையடுத்து கட்டுமாணப் பணிகள் நடைபெற்று புதிய கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டது. கட்டட திறப்பு விழா டிசம்பர் 7-ல் நடைபெறவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது.

அதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணம், நெடுந்தீவு மறைமாவட்ட ஆயர்கள் செய்து வந்தனர். இதனிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை காலமானதை அடுத்து தேவாலய புதிய கட்டடத்தின் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக மீனவர்களையும் அனுமதிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில் தமிழக மீனவர்களை அனுமதிக்க வேண்டும். திறப்பு விழாவிற்கு கட்டுப்பாடுகள் ஏதுமின்றி தமிழக மீனவர்கள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திறப்பு விழாவில் தமிழக மீனவர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. அதேபோல இலங்கை பக்தர்களுக்கும் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications