தமிழகம் முழுக்க, நீதி கேட்டு நெடும் பயணம் செய்கிறார் ஓ.பி.எஸ்.. செம்மலை அறிவிப்பு
தமிழகம் முழுக்க மக்களை சந்திக்க பன்னீர் செல்வம் பயணம் மேற்கொள்ள உள்ளார். நீதி கேட்டு அவர் பயணிப்பார். நல்லாட்சி மலரும் வரை எங்களின் தர்மயுத்தம் தொடரும் என்றார் செம்மலை.
சென்னை: மக்களை சந்திக்க பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் பயணம் செய்ய உள்ளார் என்று மேட்டூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ செம்மலை தெரிவித்தார்.
முதல்வர் பன்னீர் செல்வம் இன்று காலை அளித்த பேட்டியில் சசிகலா குரூப்புக்கு எதிரான தனது தர்ம யுத்தம் தொடரும் என கூறியிருந்தார். இந்நிலையில், செம்மலை, மாஃபா பாண்டியராஜன் போன்ற ஓ.பி.எஸ் தரப்பு மூத்த நிர்வாகிகள் இன்று மதியம் பேட்டியளித்தனர்.

அப்போது செம்மலை கூறியதாவது:
தமிழகம் முழுக்க மக்களை சந்திக்க பன்னீர் செல்வம் பயணம் மேற்கொள்ள உள்ளார். நீதி கேட்டு அவர் பயணிப்பார். நல்லாட்சி மலரும் வரை எங்களின் தர்மயுத்தம் தொடரும்.
நான்கூட தொகுதி மக்களின் கருத்தை கேட்டுதான் பன்னீர்செல்வம் பக்கம் வந்தேன். அதிமுக எம்எல்ஏக்கள் தொகுதி மக்களின் கருத்தைகேட்டும், மனசாட்சிப்படியும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க வேண்டும் என்றார் செம்மலை.












Click it and Unblock the Notifications