சீரமைப்பு பணிகள்: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஓ.பி.எஸ். ஆலோசனை
சென்னை: புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்துவது குறித்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
வர்தா புயலால் சென்னையில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் பேய்க்காற்றுக்கு 6 ஆயிரம் மரங்கள் விழுந்துள்ளன, 4 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.

இன்று மதியம் அல்லது மாலை மின்வினியோகம் அளிக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், அரசு அதிகாரிகளுடன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்துவது குறித்து அவர் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நேற்றும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சாய்ந்து கிடக்கும் மரங்கள், மின்கம்பங்களை அகற்றும் பணி துரிதமாக நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications