குடியரசு தின விழா… அமைதியாக விருது வழங்கிய ஓ.பன்னீர் செல்வம். உணர்ச்சியின்றி காணப்பட்ட அமைச்சர்கள்!
சென்னை: குடியரசுத் தினவிழாவை ஒட்டி முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், 5 போலீசாருக்கு வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்தையும், நான்கு போலீசாருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கத்தையும் வழங்கி கவுரவித்தார்.
சென்னை மெரினாவில் காந்தி சிலை அருகே நடைபெற்ற விழாவில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் பங்கேற்றனர். தேசியக் கொடியை ஏற்றிவைத்து முப்படையின் அணிவகுப்பை ஆளுநர் ரோசய்யா ஏற்றார்.
அதனைத்தொடர்ந்து, சாதனையாளர்களுக்கு பல்வேறு வகையான விருதுகளை வழங்கி முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வழங்கினார்.

5 பேருக்கு அண்ணா பதக்கம்
வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை சிவகுமார், பழனிவேல் ராஜன், ராஜபூபதி, பார்த்தசாரதி, கந்தசாமி உள்ளிட்ட 5 காவலர்களுக்கு வழங்கினார். தங்கமுலாம் பூசிய பதக்கத்தை அணிவித்த முதல்வர், சான்றிதழுடன் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கி கவுரவித்தார்.

மதநல்லிணக்க விருது
ராமநாதபுரத்தைச் சேர்ந்த துல்கருணை பாட்சாவிற்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் வழங்கப்பட்டது.

காந்தியடிகள் காவலர் பதக்கம்
மதுஒழிப்பில் சிறப்பாக பணியாற்றதற்காக பாலகிருஷ்ணன், சண்முகம், பத்மாவதி,பாபு ஆகிய நால்வருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கி கவுரவித்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

வேளாண் விருது
ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த விவசாயி துரைசாமிக்கு வேளாண்துறை சிறப்பு விருது வழங்கப்பட்டது.

ஜெ. ஸ்டைல் விருது
கடந்த ஆண்டு முதல்வர் பதவியில் இருந்த ஜெயலலிதா, குடியரசு தினவிழாவில் பங்கேற்க கடற்கரைக்கு வரும் போது கலங்கரை விளக்கம் வரை அவரது கார் வந்து திரும்பும். மக்களை பார்த்து கையசைத்த படி சென்று காந்தி சிலை முன்பு இறங்கி ஆளுநரை வரவேற்க காத்திருப்பார். வீர தீர செயல்களுக்கான விருதுகளை உற்சாகமாக வழங்குவார்

வழக்கமான உற்சாகம் இல்லை
ஆனால் இன்றைய விழாவில் வழக்கமான உற்சாகத்தைக் காண முடியவில்லை. தற்போது முதல்வராக உள்ள ஓ. பன்னீர் செல்வம் நேரடியாக காந்திசிலைக்கு வந்து ஆளுநரை வரவேற்க காத்திருந்தார். ஆளுநர் கொடியேற்றிய உடன் சாதாரணமாக விருதுகளை வழங்கினார். அமைச்சர் பெருமக்களும் எந்த வித உணர்ச்சிகளும் இன்றி நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications