தீவிரவாதிகளுடன் மோதல் - காயமடைந்த இன்ஸ்பெக்டரை ஜெ. நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

புத்தூரில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை பிடிக்க தமிழக போலீஸ் படை சென்றபோது அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும்மோதல் மூண்டது.
இதில் வீட்டுக்குள் நுழைந்து பிலால் மாலிக்கைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் லட்சுமணன் முயன்றார். அப்போது அவரை பிலால் மாலிக் கடுமையாக தாக்கினார். குக்கர் உள்ளிட்டவற்றால் தாக்கியதில் படுகாயமடைந்தார் லட்சுமணன்.
தற்போது லட்சுமணன் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை முதல்வர் ஜெயலலிதா இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
கடவுள்தான் லட்சுமணனை காப்பாற்றியுள்ளார் -ஜெ.
லட்சுமணனை சந்தித்த ஜெயலலிதா, பின்னர் அவரது மனைவி மதுபென், தாயார் தனலட்சுமி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களிடம் லட்சுமணனின் வீரத்தை பாராட்டி மக்களின் நன்றியை தெரிவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட ரூபாய் 15 லட்சம் வெகுமதியை அளித்தார்.
மேலும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். லட்சுமணனை கடவுள் காப்பாற்றியுள்ளார். எதிர்காலத்தில் காவல்துறைக்கு லட்சுமணன் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications