தீவிரவாதிகளுடன் மோதல் - காயமடைந்த இன்ஸ்பெக்டரை ஜெ. நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

Subscribe to Oneindia Tamil

CM visits Inspector Lakshmanan in hospital
சென்னை: ஆந்திர மாநிலம் புத்தூரில் நடந்த கடும் சண்டையின்போது தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இன்ஸ்பெக்டர் லட்சுமணனை முதல்வர் ஜெயலலிதா இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

புத்தூரில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை பிடிக்க தமிழக போலீஸ் படை சென்றபோது அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும்மோதல் மூண்டது.

இதில் வீட்டுக்குள் நுழைந்து பிலால் மாலிக்கைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் லட்சுமணன் முயன்றார். அப்போது அவரை பிலால் மாலிக் கடுமையாக தாக்கினார். குக்கர் உள்ளிட்டவற்றால் தாக்கியதில் படுகாயமடைந்தார் லட்சுமணன்.

தற்போது லட்சுமணன் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை முதல்வர் ஜெயலலிதா இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

கடவுள்தான் லட்சுமணனை காப்பாற்றியுள்ளார் -ஜெ.

லட்சுமணனை சந்தித்த ஜெயலலிதா, பின்னர் அவரது மனைவி மதுபென், தாயார் தனலட்சுமி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களிடம் லட்சுமணனின் வீரத்தை பாராட்டி மக்களின் நன்றியை தெரிவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட ரூபாய் 15 லட்சம் வெகுமதியை அளித்தார்.

மேலும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். லட்சுமணனை கடவுள் காப்பாற்றியுள்ளார். எதிர்காலத்தில் காவல்துறைக்கு லட்சுமணன் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+