இந்திய கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 12 சிங்கள மீனவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 12 சிங்கள மீனவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து கிழக்காக சுமார் 120 கடல் மைல் தூரத்துக்குள் 2 படகுகளில் 12 சிங்கள மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை இந்திய கடலோர காவல்படை சுற்றி வளைத்து கைது செய்தது.
அத்துடன் அவர்களது படகுகளில் இருந்த 750 கிலோ மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டோர் மீது இந்திய கடல் எல்லை சட்டத்தை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிடிபட்ட சிங்கள மீனவர்கள் அனைவரும் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications