"டோர்னியர்" மாயம் குறித்து காவல் துறையிடம் புகார்! எந்த பிரிவில் வழக்கை பதிவு செய்வது என குழப்பம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை : கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான டோர்னியர் விமானம் மாயமாகி 10 நாட்கள் கடந்து விட்ட நிலையில், விமானம் காணாமல் போனது குறித்து காவல்நிலையத்தில் கடலோர பாதுகாப்பு படை புகார் அளித்துள்ளது.
டோர்னியர் விமானத்தை தேடும் பணியில் நீர் மூழ்கிக் கப்பல் அதி நவீன ரேடார் கப்பல் என கடலோர காவல் படை மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இந்நிலையில், ரிலையன்சுக்கு சொந்தமான ரிமோட் சென்சார் கொண்ட அதி நவீன கப்பல் சிதம்பரம் பகுதிக்கு வந்துள்ளது. அக்கப்பல் இன்று டோர்னியர் விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுகிறது.
இந்நிலையில், டோர்னியர் கப்பலை கண்டுபிடித்து தருமாறு கடலோர பாதுகாப்பு படை, சென்னை மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
இதனை ஏற்றுக் கொண்ட போலீசார் எந்த பிரிவில் இந்த வழக்கை பதிவு செய்வது என்று புரியாமல் குழம்பித் தவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications