டாஸ்மாக் கடையை மூட போராடிய சென்னை கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் தடியடி.. பதற்றம்
சென்னை: அமைந்தகரையிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் கடை மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, போலீசார் நடத்திய தடியடியில் மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.
மதுவிலக்கு போராளி சசி பெருமாள் மரணத்தையடுத்து டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக தமிழகம் கொந்தளித்துள்ளது. கலிங்கப்பட்டியில் மதிமுகவினர் வைகோ தலைமையில் நேற்று நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.

இந்நிலையில் சென்னை பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் அமைந்தகரையிலுள்ள டாஸ்மாக் மீது திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தினர். கற்களை கொண்டு வீசி டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கினர். இதனால் கடை ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர்.

அப்போது சம்பவ இடத்தில் ஒரு சில போலீசாரே இருந்ததால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மாணவர்கள் மீது தடியடி நடத்தி அங்கிருந்து கலைந்து ஓடச் செய்தனர்.

போலீசாரிடம் தனியாக சிக்கிய மாணவர்கள் கடுமையான தாக்குதலுக்கு உட்பட்டனர். பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக போராட வருகை தந்திருந்த புரட்சிகர மாணவர் இயக்கத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளையும் போலீசாரின் லத்திகள் பதம் பார்த்தன. இதனால் சில மாணவிகள் மயங்கி சாய்ந்தனர்.

இதையடுத்து உத்வேகம் கொண்ட மாணவ, மாணவிகள் 'டாஸ்மாக் ஒழிக, இளைஞர்களை சீரழிக்கும் டாஸ்மாக் ஒழிக' என்பது போன்ற கோஷங்களை எழுப்பினர். அந்த பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது

இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை கல்லூரி மாணவர்கள் மீது நடந்த தாக்குதலுக்காக தமிழகம் முழுவதிலுமுள்ள கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவம் தமிழகம் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications