For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் செல்போன் டவரில் ஏறி த.வா.க மாணவர்கள் போராட்டம்

சேலத்தில் செல்போன் டவரில் ஏறி மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் கோரிக்கையை ஏற்று அவர்கள் கீழே இறங்கினர்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களுக்கு, ஆதரவாகவும், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும் தமிழர் வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 14 பேர், அஸ்தம்பட்டில் உள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர்.

Collage students protests in Salem

அப்போது போலீசார் அங்கு வந்து கீழே இறங்க கோரிக்கைவிடுத்தனர். தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். போலீசார் கோரிக்கையை ஏற்று மாணவர்கள் கீழே இறங்கினர். அதேநேரம் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தை இன்னும் பெரிய அளவில் நடத்துவோம் என மாணவர்கள் எச்சரிக்கைவிடுத்தனர்.

தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் அந்த மாணவர்களை கைது செய்துள்ளனர்.

English summary
Collage students protests in Salem for seeking justice for Tamilnadu farmers who are in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X