பள்ளி மாணவியிடம் செக்ஸ் சில்மிஷம்: கல்லூரி பேராசிரியர் கைது
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், குத்தாலத்தில், டியூசன் படிக்க வந்த பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கல்லூரி பேராசிரியரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குத்தாலம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜூ (வயது 50). பூம்புகாரில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அந்த கல்லூரியில் பொருளியல் துறை தலைவராகவும் உள்ளார். இவரது மனைவி பிரசன்னலெட்சுமி. இவர் குத்தாலத்தில் ஒரு பள்ளியை நடத்தி வருகிறார்.
ஆசிரியர் சில்மிஷம்
கிருஷ்ணராஜூவின் மனைவி பிரசன்னலெட்சுமி நடத்தி வரும் பள்ளி வளாகத்தில் மாலை நேரங்களில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவு மாணவ-மாணவிகளுக்கு கிருஷ்ணராஜூ டியூசன் எடுத்தார். அந்த டியூசன்சென்டரில் படித்து வந்த மாணவிகளிடம் பேராசிரியர் கிருஷ்ணராஜூ சில்மிஷம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மாணவிக்கு மிரட்டல்
இந்த நிலையில் நேற்று முன் தினம் குத்தாலம் அஞ்சாறுவார்த்தலை பகுதியை சேர்ந்த சிவா மகள் பிரியா (வயது 14) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) என்கிற 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் கிருஷ்ணராஜூ சில்மிஷம் செய்ததோடு, மாலை 6 மணிக்கு மேல் நீ மட்டும் இங்கேயே இருக்க வேண்டும் என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.
போலீசில் புகார்
இதனால் மிரண்டு போன மாணவி மஞ்சு, அங்கிருந்து வீட்டுக்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்ததை கூறினார். இதுகுறித்த மாணவியின் பெற்றோர் குத்தாலம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் மயிலாடுதுறை உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமணி விசாரணை மேற்கொண்டார்.
பேராசிரியர் கைது
குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேராசிரியர் கிருஷ்ணராஜூவை கைது செய்தனர். பின்னர்அவர் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications