200 அடி உயர அருவியில் செல்ஃபி... பேராசிரியர் தவறிவிழுந்து பலி.. வேலூரில் சோகம்
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வீரணமலையின் 200 அடி உயர அருவியில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்ற கல்லூரி பேராசிரியர் தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.
வேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது வீரணமலை. இந்த மலைப் பகுதியில் கடந்த வாரங்களில் பெய்த தொடர் மழையால் 200 அடி உயரத்தில் இருந்து புதிய அருவிகள் உருவாயின.
இந்த திடீர் அருவிகளைப் பார்ப்பதற்கும், அவற்றில் குளிக்கும் ஆவலிலும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவியத் தொடங்கினர். எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி பாதுகாப்பற்ற முறையில் அமைந்துள்ள திடீர் அருவியில் குளிப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தனர். கடந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் வழக்கத்தைவிடக் கூட்டம் அதிகமாக இருந்தது.

புதன்கிழமை வாணியம்பாடி உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர் அருள் என்பவர் அருவியில் குளித்துவிட்டு அருவியின் மேல்பகுதியில் இருந்து செல் போனில் செல்ஃபி எடுத்து விளையாடினார். அப்போது அருவி உருவாகும் இடத்தில் இருந்து செல்பி எடுக்க முயன்ற போது கால் இடறி 200 அடி பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே உடல் சிதறி அருள் உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த ஆந்திர காவல்துறையினர், பாதுகாப்பற்ற மலை அருவியில் அனுமதியின்றி குளித்துக் கொண்டிருந்தவர்களை விரட்டி அடித்தனர். பின்னர் 200 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த கல்லூரி பேராசிரியர் அருளின் உடலை மீட்டு குப்பம் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
செல்ஃபி மோகத்தால் கல்லூரி பேராசிரியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications