விருதுநகர் மாவட்ட இ.கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
மதுரை: விருதுநகர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வீரசோழன்பகுதியை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நரிக்குடி ஓன்றிய பொறுப்பாளர் கனகராஜ் என்பவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். சரமாரியாக வெட்டப்பட்ட கனகராஜ், ரத்த வெள்ளத்தின் நடுவே பலியானார். வீரசோழன் காவல்துறையினர் மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications