இசை வேளாளர் சமூகத்தை அவமதித்து விட்டார் வைகோ... போலீஸில் புகார்
மதுரை: திமுக தலைவர் கருணாநிதியை அவதூறாகப் பேசியதன் மூலம் இசை வேளாளர் சமூகத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவமதித்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும என்று கோரி மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் தரப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வ.உ.சி. இளைஞர் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளரான கனகவேல் என்பவர் மதுரை போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவைச் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில், இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்தவரும், மூத்த அரசியல்வாதியுமான திமுக தலைவர் கருணாநிதியை அவதூறாக பேசி வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
புகார் மனுவைக் கொடுத்து விட்டு வெளியே வந்த கனகவேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், கருணாநிதி குறித்து வைகோ பேசியதை கண்டித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மதிமுக ற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்க எங்களது பேரவை பாடுபடும் என்றார்.