For Daily Alerts
Just In
வெட்டியான் விவகாரம்: விஷாலைக் கைது செய்யக் கோரி கமிஷனரிடம் புகார்!
சென்னை: வெட்டியான் என்ற வார்த்தையை இழிவாகப் பேசியதால் நடிகர் விஷாலைக் கைது செய்யக் கோரி காவல்துறை ஆணையரிடம் தமுக என்ற கட்சி புகார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சி கமிஷனரிடம் அளித்துள்ள புகாரில்," 17-10-15 அன்று தந்தி தொலைக்காட்சியில் பேசிய நடிகர் விஷால் ரெட்டி தமிழகத்தைச் சார்ந்த வெட்டியான் என்ற தொழில் செய்பவர்களை இழிவு படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
அதனால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் மூலம் விசால் ரெட்டியை கைது செய்ய வேண்டும்," என குறிப்பிட்டுள்ளது.
நேற்று மாலை இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட காவல்துறை ஆணையர் அலுவலகம் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது.
Comments
English summary
Tamilar Munnetra Kazhagam, a political outfit has lodged a complaint to arrest Vishal for abusing 'Vettiyan' community at commissioner office.
Story first published: Tuesday, October 20, 2015, 12:42 [IST]