அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளர்கள் மீது அழகர் கோவில் கருட சித்தர் கொலை மிரட்டல் புகார்!
கொலைமிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும் என கருடசித்தர் புகாரளித்துள்ளார்.
மதுரை: அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளர்கள் மீது மதுரை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொலை மிரட்டல் புகார் அளிக்கப்பட்டுள்ளது
மதுரை அழகர்கோவிலை சேர்ந்த கருட சித்தர் என்பவர் சமூக வளைதளங்களில் பல்வேறு பொது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசின் மக்கள் விரோதபோக்கை கண்டித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து இன்று மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்த கருட சித்தர், புகார் மனு ஒன்றினை அளித்துள்ளர். அதில், அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளர்கள் தம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டு தகாத வார்த்தைகளால் பேசுவதுடன் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கருடசித்தர், சமூக வளைதளங்களில் தனது கருத்தை பதிவிட்டதால் அமைச்சரின் ஆதரவாளர்கள் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றஞ்சாட்டினார்.












Click it and Unblock the Notifications