அமைதி துயில் கொண்ட அப்துல் கலாம்… கண்ணீர் கடலில் மூழ்கிய மக்கள்
திருப்பூர்: மக்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இரங்கல் கூட்டங்கள், அமைதிப் பேரணிகள் நடைபெற்றன. அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மெழுகுவர்த்தி ஏற்றியும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு இரங் கல் தெரிவித்து நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதையொட்டி நேற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

திருப்பூரில் அஞ்சலி
மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவினால் நாடுமுழுவதும் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க லட்சக்கணக்கான மக்கள் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர். தொழில் நகரமான திருப்பூரில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அமைதிப்பேரணி நடத்தினர். தொழிற்சாலைகளின் முன்பு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள் கண்ணீர்
நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் பள்ளி மாணவ-மாணவிகள், வர்த்தகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் சார்பில் அப்துல் கலாம் மறைவுக்காக அமைதி பேரணி நடைபெற்றது. பேரணியில் கலந்து கொண்ட வர்கள் தங்கள் இரங்கலை வெளிப்படுத்தும் விதமாக கருப்பு சின்னம் அணிந்து இருந்தனர்.

தேவதானம்பட்டியில் அஞ்சலி
தேனி மாவட்டம் தேவதானம்பட்டியில் அப்துல் கலாம் மறைவை ஒட்டி அமைதிப் பேரணி நடைபெற்றது. கடைகளில் கறுப்புக்கொடி ஏற்றியும், சட்டைகளில் கறுப்பு பேட்ஜ் அணிந்தும் துக்கம் அனுஷ்டித்தனர். பேரூராட்சி துணைத்தலைவர் பி.ஆர். ராஜேந்திரன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகையும் பிராத்தனையும் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் அஞ்சலி
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மெளன அஞ்சலி நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.அருணகிரி தலைமை வகித்தார். தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அப்துல் கலாம் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

அமைதிப் பேரணி
திருவண்ணாமலை ப்யூரக் அமைப்பு தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ரோட்டரி சங்கங்கள், அரிமா சங்கங்கள், ரோட்டரி பெண்கள் அமைப்புகளின் சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

கண்ணீர் அஞ்சலி
திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் இருந்து புறப்பட்ட அமைதிப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று காமராஜர் சிலை பகுதியில் நிறைவடைந்தது. தொடர்ந்து, அப்துல் கலாம் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், ப்யூரக் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் டி.கவுதம்குமார், ஹெப்ரான் பள்ளி இயக்குநர் பி.டி.எல்.சங்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சிவகாசியில் அமைதி ஊர்வலம்
அப்துல் கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இந்த நாளில் சிவகாசியை அடுத்த தாயில்பட்டி, ராமலிங்கபுரத்தில் ஏராளமான பொதுமக்கள் அவரது உருவப்படத்துடன் அமைதியாக பேரணி சென்றனர். இறுதியில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

கண்ணீர் கடலில் மக்கள்
அப்துல் கலாம் போல ஒரு தலைவர் நமக்கு கிடைக்காது என்று ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகளை இளைய சமுதாயத்தினர் பின்பற்ற வேண்டும் என்றும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications