"வெந்தும் வேகாமலும்" வரும் புதிய ரூ. 500 நோட்டுக்கள்.. அவசரமாக அச்சடித்ததால் தவறு: ஆர்பிஐ
புதிய 500 ரூபாய் நோட்டுகள் வெவ்வேறாக இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 500 ரூபாய் நோட்டுகளே வெவ்வேறாக இருப்பதால் பொதுமக்களிடையே படுபயங்கர குழப்பம் ஏற்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளை அவசரம் அவசரமாக அச்சிட்டதால் இத்தகைய தவறு நேர்ந்துவிட்டதாகவும் ரிசர்வ் வங்கியும் ஒப்புக் கொண்டிருப்பது பொதுமக்களிடத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு முடிவு கட்டிய மத்திய அரசு அதற்கு மாற்று ஏற்பாடுகளை உடனே மேற்கொள்ளவில்லை. இதனால் 2 வார காலமாக இந்தியா முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை படுமோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

மெல்ல மெல்ல புதிய ரூ2,000 நோட்டுகளை விநியோகித்த மத்திய அரசு தற்போது புதிய ரூ500 நோட்டுகளை இறக்கிவிட்டிருக்கிறது. ஆனால் இந்த புதிய ரூ500 நோட்டுகளை பயன்படுத்துவதில் பொதுமக்களுக்கு கடும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த புதிய ஒரிஜனல் ரூ500 நோட்டுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக காணப்படுகின்றன. அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் எழுத்துகள், பாதுகாப்பு அம்ச கோடுகள் போன்றவை ஒரே சீராக இல்லாமல் வெவ்வேறாக காணப்படுகின்றன.
இதனால் கையில் இருப்பது ஒரிஜனல் ரூ500 நோட்டா? அல்லது கள்ள 500 ரூபாய் நோட்டா என்ற குழப்பம் மக்களிடத்தில் எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி செய்தித் தொடர்பாளர் அல்பனா கில்லாவலா, ரூபாய் நோட்டுகளை அவசரம் அவசரமாக அச்சடித்ததால் இத்தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த நோட்டுகளை பொதுமக்கள் அச்சமின்றி பயன்படுத்தலாம். அல்லது ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைத்துவிடலாம் என கூறியுள்ளார். ரிசர்வ் வங்கியின் இந்த அலட்சியம் பொதுமக்களிடத்தில் மிகக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications