செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்ட்டில் கெஜ்ரிவால் கொடும்பாவி எரிப்பு
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் டெல்லியில் நடந்த ஆம் ஆத்மி கூட்டத்தில் இந்தியாவின் அதி தீவிர ஊழல் அரசியல்வாதிகள் பட்டியலை வெளியிட்டனர். அதில் ராகுல் காந்தி பெயரையும் சேர்த்திருந்தனர்.
இதற்கு காங்கிரஸார் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், செங்கல்பட்டில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கட்சித் தொண்டர்கள் கூடி பழைய பஸ் நிலையப் பகுதியில் கெஜ்ரிவால் உருவபொம்மையை தீவைத்து எரித்தனர்.
கெஜ்ரிவாலை கண்டித்தும், நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்கம் செய்த எதிர்கட்சி உறுப்பினர்களை கண்டித்தும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications