சிதம்பரம் தொகுதி காங். வேட்பாளர் வள்ளல்பெருமாளை மாற்றக் கோரி தீக்குளிக்க முயற்சி!
சென்னை: சிதம்பரம் லோக்சபா தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வள்ளல்பெருமாளை மாற்றக் கோரி சென்னையில் அக்கட்சியின் தலைமையகம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் 30 லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில் தங்கபாலு, வாசன், சிதம்பரம், ஞானதேசிகன் போன்ற பலரது பெயரும் இடம்பெறவில்லை.

இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் வள்ளல்பெருமாள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகையிட்டனர்.
சிதம்பரத்தில் வள்ளல்பெருமாளை மாற்றாவிட்டால் தேர்தல் பணிகளை மேற்கொள்ளமாட்டோம். அவரை நீக்காவிட்டால் தீக்குளிப்போம் என்று முழக்கமிட்டு ஒருசிலர் தீக்குளிக்க முயற்சித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
அப்போது அங்கு வந்த காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அவர்களை சமாதானப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications