எந்த கட்சியிலும் உறுப்பினராக இல்லாதவரும் முதல்வராகும் அளவுக்கு ஏமாளிகளா நாம்? ஜோதிமணி கேள்வி
தமிழகத்தில் மட்டும்தான் ஒருவர் எக்கட்சியிலும் உறுப்பினராககூட இல்லாமல் நேரடியாக முதலமைச்சராவது பற்றி யோசிக்க முடியும். அவ்வளவு ஏமாளிகளா நாம்?! என ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் மட்டும்தான் ஒருவர் எக்கட்சியிலும் உறுப்பினராககூட இல்லாமல் நேரடியாக முதலமைச்சராவது பற்றி யோசிக்க முடியும். அவ்வளவு ஏமாளிகளா நாம் என கேள்வி எழுப்பியுள்ளார் யூத் காங்கிரசின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜோதிமணி.

தமிழகத்தில் மட்டும்தான் ஒருவர் எக்கட்சியிலும் உறுப்பினராககூட இல்லாமல் நேரடியாக முதலமைச்சராவது பற்றி யோசிக்க முடியும்.அவ்வளவு ஏமாளிகளா நாம்?!
— Jothimani (@jothims) December 19, 2016
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், தமிழகத்தில் மட்டும்தான் ஒருவர் எக்கட்சியிலும் உறுப்பினராககூட இல்லாமல் நேரடியாக முதலமைச்சராவது பற்றி யோசிக்க முடியும். அவ்வளவு ஏமாளிகளா நாம்?! என கேள்வி எழுப்பியுள்ளார்.
பணமதிப்புநீக்கத்தால் மக்கள் அவதியுறும் சூழலில் தமிழக முதல்வர் பிரதமரை சந்திக்கிறார். அதுபற்றி ஒருவார்த்தைகூட பேசவில்லை.பிறகெதற்கு முதல்வர்?
— Jothimani (@jothims) December 19, 2016
இதேபோல நேற்று தமிழக முதல்வர் பன்னீர் செல்வம், பிரதமர் மோடியை சந்தித்தது குறித்தும் விமர்சனம் செய்துள்ளார், ஜோதிமணி. பணமதிப்புநீக்கத்தால் மக்கள் அவதியுறும் சூழலில் தமிழக முதல்வர் பிரதமரை சந்திக்கிறார். அதுபற்றி ஒருவார்த்தைகூட பேசவில்லை. பிறகெதற்கு முதல்வர்? என்று மற்றொரு டிவிட்டில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Congress leader Jothimani critisise Tamilnadu political situation.
தமிழகத்தில் மட்டும்தான் ஒருவர் எக்கட்சியிலும் உறுப்பினராககூட இல்லாமல் நேரடியாக முதலமைச்சராவது பற்றி யோசிக்க முடியும். அவ்வளவு ஏமாளிகளா நாம் என கேள்வி எழுப்பியுள்ளார் யூத் காங்கிரசின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜோதிமணி.












Click it and Unblock the Notifications