சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டி... ஈவிகேஎஸ்.இளங்கோவன் அதிரடி பேட்டி
திருவாடானை : அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சென்ற ஈவிகேஎஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்...

வருகிற சட்ட சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவதே நோக்கம். தேர்தல் நேரத்தில் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்.
அதிமுகவினர் எனக்கு விரோதமாக நடத்தும் போராட்டங்களை ஒரு போராட்டமாகவே நினைக்கவில்லை.
அதிமுகவினர் அம்மாவிடம் நல்ல பேர் வாங்குவதற்காக வெளியூரில் இருந்து ஆட்களை கூட்டிவந்து கொடும்பாவி எரிக்கிறார்கள்.அவர்களுக்கு எம்எல்ஏ சீட் கிடைக்கும், கிடைத்தால் எனக்கு மகிழ்ச்சி. சீட் கிடைத்து தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றிபெற முடியாது.
மேலும் அதிமுக ஆட்சியில் மக்களுக்கு பயன்பெறும் திட்டங்கள் ஏதும் இல்லை. மாறாக கொலை கொள்ளை, பெண்களிடம் செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் தான் தினமும் செய்தி தாளில் பட்டியலிடப்படுகிறது. இவ்வாறு ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications