கார்த்தி சிதம்பரம் கைதைக் கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கார்த்தி சிதம்பரம் கைதைக் கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
Recommended Video
சென்னை : ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை நேற்று சென்னை விமான நிலையத்தில் வைத்து சி.பி.ஐ கைது செய்தது.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அந்நிய முதலீடுகளைப் பெற்றுத் தந்த வழக்கில், கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருப்பதாக சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
பாஜக அரசின் தவறுகளைத் தொடர்ந்து விமர்சித்து வரும் ப.சிதம்பரத்தை தடுக்கவும், நீரவ் மோடி விவகாரத்தை மூடி மறைக்கவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் கைதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.