சீக்கிரமே தமிழக காங்கிரஸுக்குப் புது 'தல'...திருநாவுக்கரசரா..?
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனின் பதவி நாட்கள் எண்ணப்படுகின்றன. விரைவில் புதிய தலைவரை நியமிக்க கட்சி மேலிடம் தீர்மானித்துள்ளதாம்.
இந்த நியமனம் தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. புதிய தலைவர் யார் என்பது தெரியவில்லை. ஆனால் கட்சியை சிறப்பான முறையில் வழி நடத்திச் செல்லக் கூடியவராக நியமிக்கப் போகிறார்களாம்.
தற்போது தமிழக காங்கிரஸ் தலைமை, நிர்வாகம் மீது கட்சித் தலைமை செம காட்டமாக உள்ளதாம். எனவேதான் தலைவரை மாற்றத் திட்டமிட்டுள்ளதாம்.

திராட்டில் விடப்பட்ட அவலம்
தமிழகத்தில் ஆட்சியை இழந்த பின்னர் காங்கிரஸ் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைத்தே லோக்சபா தேர்தல்களை சந்தித்து வந்துள்ளது. ஆனால் தற்போது முதல் முறையாக தனித்து விடப்பட்டது. இதற்குத் தமிழகத் தலைவர்களின் டிப்ளமஸி சரியில்லை என்று கட்சித் தலைமை கருதுகிறதாம்.

போட்டியிடத் தயங்கிய தலைவர்களால் எரிச்சல்
அதேபோல ஜி.கே.வாசன், ப.சிதம்பரம், தங்கபாலு உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடத் தயங்கியதும், மறுத்தது, வாரிசுகளுக்கு மட்டும் சீட் கேட்டதும் கூட தலைமையை கடுப்பாக்கியுள்ளதாம்.

அடிமட்டத்திலிருந்து அயர்ன் பண்ணப் போறாங்களாம்
கட்சியின் அடிமட்டத்திலிருந்து தலைமை வரை புதியவர்களைப் போட்டு கட்சிக்குப் புத்துயிர் ஊட்டத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

அடுத்த தலைவர் யார்...
அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பாக இப்போது கிசுகிசுப்பான பேச்சுக்கள் களை கட்டியுள்ளன.

திருநாவுக்கரசரா..
முன்னாள் மத்திய அமைச்சரும், கிளீன் தலைவர் என்று பெயரெடுத்தவருமான எஸ்.திருநாவுக்கரசரின் பெயர் தலைவர் பதவிக்கு அடிபடுகிறது.

நாச்சியப்பன்- இளங்கோவன்
அதேபோல சுதர்சன நாச்சியப்பன் மற்றும் முன்னாள் தலைவர் இளங்கோவன் ஆகியோரும் தலைவர் பதவிக்கு பேசப்படுகிறார்கள்.

இளங்கோவனுக்கு வாய்ப்பு அதிகம்
ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைவராக இருந்தபோது கட்சியை அதிரடியாக நடத்தினார். இவரது பதவிக்காலத்தின்போதுதான் வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது. அதன் பின்னர் இளங்கோவனைத் தூக்கி விட்டு வாசனைத் தலைவராக்கியது காங்கிரஸ் தலைமை.

நிர்வாகத் திறமை திருநா.வுக்கு அதிகம்
அதேசமயம், நிதானமானவர், மென்மையானவர், உறுதியானவர், அனுசரித்துப் போகக் கூடியவர், திறமை மிக்கவர் என்ற வகையில் திருநாவுக்கரசருக்கும் நல்ல பெயர் உள்ளது. அவருக்கான வாய்ப்பும் அதிகமாகவே உள்ளதாம்.

ராகுல் ஆதரவு
மேலும் திருநாவுக்கரசருக்கு ராகுல் காந்தியின் ஆதரவும் உள்ளதாக சொல்கிறார்கள். தமிழகத்தில் ராகுல் பிரசாரம் செய்தது திருநாவுக்கரசர் போட்டியிட்ட ராமநாதபுரத்தில் மட்டும்தான் என்பது நினைவிருக்கலாம்.

வாசன் குரூப்புக்கு பெரிய ஆப்பு கன்பர்ம்ட்
அதேசமயம், இந்த முறை ஜி.கே.வாசன் தரப்பு மீது கட்சித் தலைமை கடும் கோபத்தில் உள்ளதால் அவர்கள் அனைவரும் வேரோடு பிடுங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

திருநா. வந்தால் என்ன லாபம்..
திருநாவுக்கரசருக்கு கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளிடமும் நல்ல பெயர் உள்ளது. திமுக, தேமுதிக என்று அனைவரிடமும் அன்பு பாராட்டக் கூடியவர் அவர். அவருக்கு எதிரான மாற்றுக் கட்சித் தலைவர்களே என்று கூறும் அளவுக்கு நல்ல அன்பும், மரியாதையும் உள்ளவர். எனவே அவரே அடுத்தத் தலைவராகக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.












Click it and Unblock the Notifications