வேலூர் அருகே பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. ஒருவர் பலி.. 13 பேர் காயம்

வேலூர் மாவட்டத்தில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். .

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே புதிதாக கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளி ஒருவர் பலியாகினார். 13 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகில் உள்ள கோரந்தாங்கியில் புதிதாக பள்ளிக் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டிடத்தை கட்டும் பணியில் சுற்றுவட்டாரத்தில் இருந்து கட்டிடத் தொழிலாளர் பலர் ஈடுபட்டு வந்துள்ளனர்.

Constructing school building collapses in Vellore

இந்நிலையில், இந்தக் கட்டிடம் திடீரென இன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் இடிபாட்டில் சிக்கிக்கொண்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியது. இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கோரந்தாங்கல் பகுதியில் நடைபெற்ற இந்தக் கட்டிட விபத்தில் சிக்கி பாக்கியராஜ் என்ற கட்டிட தொழிலாளி உயிரிழந்துள்ளார். 13 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+