அதிமுக வாக்குகளைத்தான் எங்கள் கூட்டணி சிதறடிக்கும்: திருமாவளவன்
சென்னை: திமுக வுக்கான இயல்பான வாக்கு வங்கியை நாங்கள் பிரிக்கவில்லை. அதிமுகவுக்கான வாக்குகளைத்தான் எங்கள் கூட்டணி சிதறடிக்கும். இந்தத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கும் அதிமுகவுக்கும்தான் போட்டி என்று திருமாவளவன் கூறியுள்ளார். தனி நபர்களை முதல்வராக முன்னிறுத்தி னால் கொள்கை அடிபட்டுவிடும் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக திருமாவளவனை அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சில வாரங்களுக்கு முன்பு கோரிக்கையை முன் வைத்தனர்.
அப்போது, முதல்வர் வேட் பாளர் என்பதை தேர்தலுக்கு முன்பாக அறிவிப்பதில்லை என்று மக்கள் நலக்கூட்டணி தலைவர் பேசி முடிவு செய்துவிட்டோம். எனவே, அதுபற்றி பேச வாய்ப்பில்லை என்று திருமாவளவன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், வெளியூர்களிலிருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பலர், ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 20 சதவீதம் வாக்கு வங்கி உள்ளது. இந்த வாக்கு வங்கியை மக்கள் நலக் கூட்டணியின் வசமாக்குவதற்கு உங்களை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் நன்றாக இருக்கும் என்று திருமாவளவனிடம் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.

முதல்வர் வேட்பாளரா?
இது குறித்து கருத்து கூறியுள்ள திருமாவளவன், மக்கள் நலக் கூட்டணி என்பது ஐக்கிய முன்னணி. இதில் தனி நபரை முன்னிறுத்த முடியாது. பெரிய கட்சிகளில், அக்கட்சிகளை வழிநடத்தும் தலைவர்கள்தான் முதல்வர் என்பது அறிவிக்கப்படாத அறிவிப்பு. அவற்றுக்கு மாற்று என்று சொல்லும் மக்கள் நலக்கூட்டணி அப்படி செய்ய முடியாது என்றார்.

கொள்கை கூட்டணி
இந்த கூட்டணி தேர்தலுக்குப் பிறகும் செயல்படும். எனவே, மக்கள் நலக் கூட்டணியின் கொள்கைகளை முன்னிலைப்படுத்தி மட்டுமே தேர்தலை சந்திக்க வேண்டும். தனி நபரை முன்னிலைப்படுத்தினால் கொள்கை அடிபட்டு விடும் என்றும் கூறினார்.

அதிமுக உடன் போட்டி
மக்கள் நலக்கூட்டணி அதிமுகவிற்கு சாதகமான கூட்டணி என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில்
விடுதலைச் சிறுத்தைகள் சாராத தலித் வாக்காளர்களும் எங்களுக்கு வாக்களிக்கும் மனநிலையில் உள்ளனர் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.

அதிமுக வாக்குகளை சிதறடிக்கும்
திமுக வுக்கான இயல்பான வாக்கு வங்கியை நாங்கள் பிரிக்கவில்லை. அதிமுகவுக்கான வாக்குகளைத்தான் எங்கள் கூட்டணி சிதறடிக்கும். இந்தத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கும் அதிமுகவுக்கும்தான் போட்டி என்று கூறியுள்ளார்.

தேமுதிக உடன் கூட்டணி
தேமுதிகவுடன் பல முரண்பாடுகள் இருந்தாலும், ஊழல், மது என்னும் பிரதான பிரச்சினையில் அக்கட்சியுடன் உடன்படுகிறோம். தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தால் மேலும் வலிமையடைவோம் என்பதால் அக்கூட்டணியை விரும்புகிறோம். குடும்ப அரசியல், தனி மனித செயல்பாடுகள் போன்ற முரண்பாடுகளை முதன்மையாகக் கொள்ளவில்லை என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications