தொடர் விடுமுறை: சொந்த ஊருக்கு செல்வோரிடம் பகல் கொள்ளைக்கு தயாராகிவிட்ட ஆம்னி பஸ்கள்!
4 நாள்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுக்கவுள்ளதால் ஆம்னி பஸ்களின் கட்டணங்கள் கிடுகிடு என உயர்ந்துள்ளது.
சென்னை:கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினம் என்பதால் தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பஸ்கள் தங்களின் கட்டணத்தை மிக மிக அதிகமாக உயர்த்தியுள்ளன.

பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. மேலும் கிருஷ்ண ஜெயந்தி விழா திங்கள்கிழமையும், சுதந்திர தின விழா 15-ஆம் தேதியும் செவ்வாய்க்கிழமையும் வருகிறது.இதனால் மொத்தம் 4 நாள்கள் விடுமுறை கிடைப்பதால் சென்னையில் தங்கி படித்து வரும் மாணவர்கள், வேலைபார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.
இதனால் 11-ஆம் தேதி சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. காத்திருப்போர் பட்டியலும் தாறுமாறாக காணப்படுகிறது.
இதையடுத்து ஆம்னி பஸ் மூலம் பயணம் செய்யலாம் என்று நினைத்து அவர்களின் இணையதளத்தை முன்பதிவு செய்பவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தீபாவளி, பொங்கல் சீசன் போல் ஆம்னி பஸ்களின் டிக்கெட் கட்டணம் தாறுமாறாக எகிறியுள்ளது.
அவர்களின் இணையதளத்தின்படி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இன்று செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரையிலான தேதிகளில் பயணிக்க ரூ.780 (ஏ.சி.) கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தொடர் விடுமுறை எதிரொலியால் 11-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரையிலான தேதிகளில் பயணிக்க ரூ.1,600 கட்டணம் என்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடிக்கான ஆம்னி பஸ்கள் விவரம் இன்றைய பயண கட்டணமும் 11-ஆம் தேதி பயண கட்டணமும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏ.சி. வசதி- ரூ.780 - ரூ.1,600
படுக்கை ஏ.சி.வசதி - ரூ.920 - ரூ.1,600
அதிவேக சொகுசு ஏ.சி. வசதி- ரூ.900 - ரூ.1,900
பென்ஸ் படுக்கை ஏ.சி.வசதி- ரூ.1,100 - ரூ.1,900
இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கட்டணத்தை உயர்த்தும் ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications