நெல்லை மாவட்டத்தில் தொடரும் நகை திருட்டுகள்: வீடுகளை விட்டு வெளியே செல்ல பொதுமக்கள் அச்சம்
நெல்லை மாவட்டத்தில் தொடரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தொடரும் நகை திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சம் தெரிவித்து உள்ளனர். கடந்த சில நாட்களில் மட்டும் நடந்துள்ள தொடர் கொள்ளை சம்பவங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதே பகுதியில் மடவிளாகம் தெருவில் தங்க, வெள்ளி அடகு கடை நடத்தி வந்தார். வழக்கம் போல் இரவில் நகைகளை கடையில் உள்ள லாக்கரில் வைத்து பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் இன்று அதிகாலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்த அப்பகுதியில் வாக்கிங் செல்பவர்கள் சுரேஷ்க்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்தார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கவுரி மனோகரி தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல் வி.கே.புரம் அம்பலவாணபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் சுகுமாரி ஜூவல்லரி ஒர்க்ஸ் என்ற பெயரில் நகை நகை நடத்தி வருகிறார். இவரும் வழக்கம் போல் நகை பட்டறையை இரவில் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு பட்டறைக்கு வந்தபோது பட்டறை பூட்டு உடைக்கப்பட்டு கிடைப்பதை பார்த்து அதிர்ந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 65 கிராம் தங்கம், வெள்ளி கொலுசு, வெள்ளி டம்ளர் உள்ளிட்ட பொருட்கள் மாயமாகி இருப்பதை பார்த்து உடனடியாக வி.கே.புரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இது தொடர்பாக வி.கே.புரம் போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.இரண்டு சம்பவங்களும் ஒரே கும்பல் செய்துள்ளதா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றரனர். அதிகரிக்கும் நகை திருட்டால் பொது மக்கள் பயத்தில் உள்ளனர்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications