என்னை பற்றி தவறாக எழுதக்கூடாது.. நீதிமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு ஆர்டர் போட்ட தஷ்வந்த்!
தன்னை பற்றி தவறாக எழுதக்கூடாது என பத்திரிக்கையாளர்களுக்கு ஆர்டர்போட்டாராம் தஷ்வந்த்.
Recommended Video

செங்கல்பட்டு: தன்னை பற்றி தவறாக எழுதக்கூடாது என பத்திரிக்கையாளர்களுக்கு குற்றவாளி தஷ்வந்த் ஆர்டர் போட்டுள்ளார்.
சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
பின்னர் சிறுமியை கொன்று தீயிட்டு கொளுத்தினார். இதில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தஷ்வந்தை போலீசார் கைது செய்தனர்.

புழல் சிறையில் அடைப்பு
ஜாமீனில் வெளியே வந்த அவர் தாய் சரளாவை கொன்றுவிட்டு 25 பவுன் நகைகளை திருடிச்சென்றார். பின்னர் மும்பைக்கு தப்பியோடியவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

விவரங்கள் வெளியாகவில்லை
இந்நிலையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் தண்டனை விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

தவறாக எழுதக்கூடாது
இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த பத்திரிக்கையாளர்களை பார்த்து தன்னை பற்றி தவறாக எழுத கூடாது என கோபத்துடன் கத்தியுள்ளார் தஷ்வந்த்.

என்னை பற்றி எழுதக்கூடாது
மேலும் நீதிபதி என்ன தீர்ப்பு வழங்குகிறாரோ அதனை மட்டும் எழுதுங்கள் என்ற அவர், தன்னை பற்றி தேவையில்லாமல் எதையும் எழுதக்கூடாது என்றாராம். போலீசார் மற்றும் வழக்கறிஞர்களும் தன்னை பற்றி எதுவும் தவறாக சொல்லக்கூடாது என்றும் கட்டளையிட்டாராம் கொலை குற்றவாளி தஷ்வந்த்.












Click it and Unblock the Notifications