கூடுதல் தொகை கொடுக்க மறுத்த கூலித்தொழிலாளி- தலைகீழாய் தொங்க விட்ட டாஸ்மாக் ஊழியர்கள்!
தூத்துக்குடி: தூத்துக்குடி டாஸ்மாக் பாரில் கூடுதல் விலையை கொடுக்க மறுத்த கூலித்தொழிலாளி ஒருவரைத் தலைகீழாய் கட்டிவைத்து துன்புறுத்திய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மேலபனைகுளத்தைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் ஒரு கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர் அடிக்கடி சாத்தான்குளம் அருகே அமைந்துள்ள டாஸ்மாக்குக்கு சென்று மது குடிப்பது வழக்கம்.
அப்படி நேற்றும் டாஸ்மாக்குக்கு சென்ற அவர் மதுபாட்டிலுக்கு கூடுதலாக கேட்ட 10 ரூபாயைக் கொடுக்க மறுத்துள்ளார். இதனையடுத்து அவருக்கும், அங்குள்ளவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் அவரை தாக்கியதோடு கை, கால்களை கட்டி தலைகீழாக தொங்கவிட்டுள்ளார்கள்.
இதுகுறித்து தகவலறிந்து சாத்தான்குளம் போலீசார் அங்கு சென்று அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்செயலை செய்தவர்களின் மீது வழக்கு பதிவு செய்து, தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர் போலீசார்.












Click it and Unblock the Notifications