தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் குடகு ரிசார்ட்டுக்கு போலீஸ் நோட்டீஸ்
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குடகு மாவட்டத்தில் தங்கியுள்ள தனியார் ரிசார்ட்டின் உரிமையாளருக்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கூர்க்: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ளது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்காதது ஏன் என்று விளக்கம் கேட்டு அந்த விடுதி உரிமையாளருக்கு குடகு மாவட்ட காவல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேர் சோமவார்பேட்டை தாலுகா, குஷால்நகர் எல்லை 7வது ஓசகோட்டை என்ற பகுதியில் உள்ள பன்டிக்டன் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் சசிகலா, தினகரன் ஆகியோருக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து அங்கு தங்கியுள்ள எம்எல்ஏக்களின் செல்போன் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணை
இதனால் அவர்கள் அந்த விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்த நேற்று தமிழக போலீஸார் ரிசார்ட் சென்று விசாரணை நடத்தினர். எனினும் தங்கள் சுயவிருப்பத்தின் பேரில்தான் தங்கியுள்ளோம் என எம்எல்ஏக்கள் தெரிவித்ததால் அவர்கள் திரும்பி விட்டனர்.

காவல் துறை நோட்டீஸ்
தமிழக காவல் துறையினர் விடுதியில் சோதனை நடத்தியபோதுதான் தமிழக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விவரம் குடகு மாவட்ட காவல் துறையினருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து விடுதி உரிமையாளருக்கு காவல் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தகவல் ஏதும் இல்லை
அதில் கர்நாடக காவல் துறையின் விதிபடி சுற்றுலா தலங்களில் உள்ள விடுதிகளில் தங்குவோர், தங்கிவிட்டு செல்வோர் குறித்த பட்டியலை தினமும் விடுதி நிர்வாகம் அருகில் உள்ள காவல் துறையில் தெரிவிக்க வேண்டும் என்பதாகும். அவ்வாறிருக்க எம்எல்ஏக்கள் தங்கி ஒரு வாரம் ஆகியும் அதுகுறித்து அருகில் உள்ள சந்திகொப்பா காவல் நிலையத்தில் ஏன் தகவல் தெரிவிக்கவில்லை.

3 நாள்கள் அவகாசம்
தமிழக எம்எல்ஏக்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு. எனவே இன்னும் 3 நாள்களுக்குள் விடுதி நிர்வாகம் காவல் துறையில் விளக்கம் அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாள்களுக்குள் பதிலளிக்காவிட்டால் சுற்றுலா துறை சீல் வைக்கும் வாய்ப்பு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications