சென்னையில் கார் சீட்பெல்ட் அணியாத 331 பேரிடம் அபராதம்

சென்னையில் கார் ஓட்டுபவர்கள் டிசம்பர் 1ம் தேதி முதல் சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டவேண்டும் என்று போக்குவரத்துத்துறைப் போலீசார் அறிவித்தனர்.
போலீசாரும் வாகன ஓட்டிகளிடம் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாகன ஓட்டிகள் கேட்டுக்கொண்டதை அடுத்து இதற்கான காலக்கெடு டிசம்பர் 9ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. நேற்றோடு காலக்கெடு முடிவடைந்ததை சென்னையில் கார் சீட் பெல்ட் அணியாத டிரைவர்களிடம், நேற்று முதல் தலா ரூ.100 அபராதம் விதிக்கும் திட்டம் தொடங்கியது.
இதனையடுத்து சென்னையில் புறநகர் சாலைகளிலும், நகர் பகுதிகளிலும் போக்குவரத்துப் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று முதல் நாளன்று, கார் சீட் பெல்ட் அணியாத 331 பேரிடம், தலா ரூ.100 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்றும், மொத்தம் ரூ.33,100 அபராத தொகை கிடைத்தது என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
மதுரவாயல் பகுதிகளில் சீல்ட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தவர்களை நிறுத்திய துணை ஆணையர் எஸ். பன்னீர் செல்வம், நெடுஞ்சாலைகளில் விபத்தின் போது ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்கவே சீட் பெல்ட் அணியச் சொல்லுகிறோம் என்றார். நகர்பகுதிகளில் மெதுவாகத்தான் வாகனங்களை ஓட்டிச் செல்வார்கள். அதேசமயம் நெடுஞ்சாலைகளில் வேகமாக வாகனம் ஓட்டுவார்கள், எனவே சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்றார்.
முதல்முறையாக பிடிபடுபவர்களிடம் ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. இரண்டாம்முறையாக பிடிபட்டால் ரூ.300 அபராதம் கட்டவேண்டும் என்றார் எஸ். பன்னீர்செல்வம்.
பொதுமக்களும் போக்குவரத்துத்துறை போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். சில நாட்கள் மட்டுமே கண்காணித்துவிட்டு மறுபடியும் கிடப்பில் போட்டுவிடக்கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications