சென்னையில் கார் சீட்பெல்ட் அணியாத 331 பேரிடம் அபராதம்

சென்னையில் கார் ஓட்டுபவர்கள் டிசம்பர் 1ம் தேதி முதல் சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டவேண்டும் என்று போக்குவரத்துத்துறைப் போலீசார் அறிவித்தனர்.
போலீசாரும் வாகன ஓட்டிகளிடம் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாகன ஓட்டிகள் கேட்டுக்கொண்டதை அடுத்து இதற்கான காலக்கெடு டிசம்பர் 9ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. நேற்றோடு காலக்கெடு முடிவடைந்ததை சென்னையில் கார் சீட் பெல்ட் அணியாத டிரைவர்களிடம், நேற்று முதல் தலா ரூ.100 அபராதம் விதிக்கும் திட்டம் தொடங்கியது.
இதனையடுத்து சென்னையில் புறநகர் சாலைகளிலும், நகர் பகுதிகளிலும் போக்குவரத்துப் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று முதல் நாளன்று, கார் சீட் பெல்ட் அணியாத 331 பேரிடம், தலா ரூ.100 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்றும், மொத்தம் ரூ.33,100 அபராத தொகை கிடைத்தது என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
மதுரவாயல் பகுதிகளில் சீல்ட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தவர்களை நிறுத்திய துணை ஆணையர் எஸ். பன்னீர் செல்வம், நெடுஞ்சாலைகளில் விபத்தின் போது ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்கவே சீட் பெல்ட் அணியச் சொல்லுகிறோம் என்றார். நகர்பகுதிகளில் மெதுவாகத்தான் வாகனங்களை ஓட்டிச் செல்வார்கள். அதேசமயம் நெடுஞ்சாலைகளில் வேகமாக வாகனம் ஓட்டுவார்கள், எனவே சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்றார்.
முதல்முறையாக பிடிபடுபவர்களிடம் ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. இரண்டாம்முறையாக பிடிபட்டால் ரூ.300 அபராதம் கட்டவேண்டும் என்றார் எஸ். பன்னீர்செல்வம்.
பொதுமக்களும் போக்குவரத்துத்துறை போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். சில நாட்கள் மட்டுமே கண்காணித்துவிட்டு மறுபடியும் கிடப்பில் போட்டுவிடக்கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications