பஞ்சு லாரியில் தீ - கவனிக்க தவறிய டிரைவர் - 2 குடோன்கள் சாம்பல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கழிவு பஞ்சு ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்தது. இதனால் இரண்டு குடோன்கள் எரிந்து பல லட்சம் நாசம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் பெருமாள்சாமி. சொந்த லாரி வைத்து் தொழில் செய்து வந்தார். அதிகாலை 3 மணி அளவில் தனது லாரியில் கழிவு பஞ்சு மூடைகளை ஏற்றி கொண்டு விஎம்எஸ் நகரிலிருந்து நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இறக்குவதற்காக புறப்பட்டார்.
பஞ்சு மூடை என்பதால் லாரியில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி இருந்தார். லாரி ஒரு குறுகலான சந்து வழியாக வரும் போது மேலே சென்ற மின்வயரில் உரசியுள்ளது. இதனால் குபீரென தீப்பிடித்துள்ளது. இதை பெருமாள்சாமி கவனிக்காமல் தொடர்ந்து ஓட்டி வந்துள்ளார்.
பஞ்சு மூ்ட்டைகள் தீப்பிடித்து அவை தொடர்ந்து ரோட்டில் விழுந்து கொண்டே வந்துள்ளன. நகருக்கு வெளியே வந்த போது குறிஞ்சிநகர் கண்ணன் என்பவரது குடோன் முன்புறம் தீப்பற்றிய பஞ்சு மூட்டை விழுந்துள்ளது. அந்த சமயம் காற்று பலமாக வீசி கொண்டிருந்தால் அங்கிருந்த மூங்கில் கம்புகள் தீயால் வெடித்து சிதறின.
இதில் அருகிலுள்ள மற்றொரு குடோனிலும் தீப்பிடித்தது. அங்கு சணல் சாக்கு மற்றும் பிளாஸ்டிக் சாக்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றிலும் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கின. காற்றின் வேகத்தால் அடுத்துள்ள தும்பு என்பவரது குடோனிலும் தீப்பிடித்துள்ளது.
இதற்குப் பிறகுதான் பெருமாள் சாமிக்கு லாரியில் தீப்பிடித்த விவரமே தெரிய வந்தது. உடனடியாக லாரியை நிறுத்திய அவர் தீயை அணைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோட்ட தீயணைப்பு அதிகாரி பாலசுப்பிரமணியன் தலைமையில் டவுன், சிப்காட், துறைமுகம், ஸ்டெர்லைட் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்க வீரர்கள் கடுமையாக போராடினர். தீ அதிக உயரம் கொளுத்து விட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியவில்லை.
இன்று காலை 6 மணிக்குதான் தீயை முற்றிலுமாக அணைக்க முடிந்தது. இதில் பல லட்சம் மதிப்பிலான வைக்கோல், டயர், கம்புகள், சாக்குகள் எரிந்து நாசமாயின.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications