செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் மங்கள்யான் விண்கல கவுண்ட் டவுன் இன்று துவங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை: செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பும் மங்கள்யான் விண்கலம் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்படுவதற்கான கவுண்ட் டவுன் இன்று காலை துவங்கியது.
செவ்வாய் கிரகத்தின் மேற்கூரை மற்றும் அங்கு மீத்தேன் உற்பத்தி ஆகும் இடம் குறித்து ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு மையம் மங்கள்யான் விண்கலத்தை வரும் 5ம் தேதி மதியம் 2.38 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-25 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.

இதற்கான ஒத்திகை கடந்த வியாழக்கிழமை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவு தளத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் விண்கலம் ஏவப்படுவதற்கான கவுண்ட் டவுன் இன்று காலை 6.08 மணிக்கு துவங்கியது. ரூ.430 கோடியில் மங்கள்யான் விண்கலம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications