For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செங்கோட்டை அருகே கார் மோதி பைக்கில் சென்ற கணவன், மனைவி பலி

Google Oneindia Tamil News

செங்கோட்டை: செங்கோட்டை அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் கணவன், மனைவி பலியாகியுள்ளனர்.

செங்கோட்டை அருகே உள்ள புளியரை தெற்குமேடு, முப்புடாதியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மாரியப்பன். கூலித் தொழிலாளி. அவரது மனைவி கிருஷ்ணமாரி. மாரியப்பன் தனது மனைவியை அழைத்துக் கொண்டு "எஸ் வளைவில்" உள்ள மாமியாரை பார்க்க இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

Couple killed in road accident near Shencottah

அப்போது கேரளாவில் இருந்து செங்கோட்டை நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மாரியப்பனின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கணவனும், மனைவியும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அவர்களை கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

Couple killed in road accident near Shencottah

அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பனும், அவரது மனைவியும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் ஓட்டுனர் டேவிட் ராஜாவை தேடி வருகின்றனர். விபத்தில் கணவனும், மனைவியும் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Couple killed in road accident near Shencottah

மாரியப்பன், கிருஷ்ணமாரி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A couple was killed in a road accident near Shencottah when a speeding car hit their two wheeler.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X