சென்னை அண்ணாசாலையில் விபத்து: லாரி மோதியதில் இருவர் பலி

சென்னை அண்ணாசாலையில் விபத்தில் சிக்கி தம்பதி பலிசென்னை அண்ணாசாலையில் விபத்து நடந்ததை அடுத்து லாரி மோதியதில் தம்பதி பலியாகினர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணாசாலையில் நடந்த விபத்தில் லாரி மோதியதில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பலியாகினர்.

சென்னை அண்ணாசாலையில் இரு சக்கர வாகனத்தில் ஒரு ஆணும், பெண்ணும் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஸ்பென்சர் பிளாசா அருகே சென்ற போது சிக்னலை வேகமாக கடக்க முயன்றனர்.

Couple who travels in bike hit by water lorry and died in Chennai

அப்போது குறுக்கே வந்த லாரி மீது பைக் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இருவரும் திருமண நிகழ்ச்சிக்காக அழைப்பிதழ்களை கொடுக்க சென்றுள்ளது தெரியவந்தது. இருவரும் தாய்- மகன் என்றும் கணவன்- மனைவி என்றும் கூறப்படுகிறது. இவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே லாரி ஓட்டுநர் பாலசந்திரனை போலீஸார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+