பூந்தமல்லி நண்பர்கள் கொலை வழக்கு – கொலையாளிகள் இருவருக்கும் 5 ஆண்டுகள் சிறை!
சென்னை: சென்னையில் சொந்த நண்பரையே கொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றவாளி இரண்டு பேருக்கும் 5 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் . இவருடைய நண்பர்கள் அம்பத்தூர், எம்.கே.பி.நகர் பகுதியைச் சேர்ந்த குமார், ஷாஜி.
கடந்த மே 2011 ஆம் ஆண்டு அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் ஏரியில் மீன் பிடிப்பதற்காக நண்பர்கள் 3 பேரும் சென்று கொண்டிருந்தனர்.

நண்பர்களிடையே வாக்குவாதம்:
அப்போது ரமேசுக்கும், அவரது நண்பர்களான குமார், ஷாஜி ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் இருவரும் சேர்ந்து ரமேஷை தாக்கி கீழே தள்ளினார்கள்.
உயிரிழந்த ரமேஷ்:
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ரமேஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீசார் கைது:
திருமுல்லைவாயல் போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக குமார், ஷாஜி ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
5 ஆண்டுகள் சிறைதண்டனை:
இது தொடர்பான வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, குற்றவாளிகளான குமார், ஷாஜி ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராதமும் விதிப்பு:
அபராதம் கட்டத்தவறினால் மேலும் 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.
வழக்கு விசாரணை:
அரசு தரப்பில் வழக்கறிஞர் அந்தமான் முருகன் ஆஜராகி வாதாடினார். கடந்த 1 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
10 நாட்களில் தீர்ப்பு:
சாட்சிகளிடம் உடனுக்குடன் விசாரணை செய்யப்பட்டு 10 நாட்களிலேயே கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications