சொத்துக் குவிப்பு வழக்கு – கோர்ட்டில் ஆஜராக சாத்தூர் ராமசந்திரனுக்கு உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜராக சாத்தூர் ராமச்சந்திரனுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த தி.மு.க ஆட்சியின் போது அமைச்சராக இருந்தவர் சாத்தூர் ராமச்சந்திரன். இவர் தனது பதவி காலத்தின் போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2012 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இந்த வழக்கு மதுரை லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அவரது குடும்பத்தினரும் சேர்க்கப்பட்டனர்.
நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சாத்தூர் ராமச்சந்திரன் நேரில் ஆஜரானார். பின்னர் இந்த வழக்கை அடுத்த மாதம் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மதுரசேகரன் உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளதால் அங்கே ஆஜராகும்படி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications